யாதும்  ஊரே யாவரும்  கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
          நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
         சாதலும் புதுவது அன்றே
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே
           மின்னொடு வானம் தண் துளி தலை இ
          காணாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர்   வழிப் படும்புனைபோல்  ஆருயிர் 
 முறைவழிப் படும் என்பது  திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் 
          மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே
         சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
கனியன் பூங்குன்றன்
 
 
No comments:
Post a Comment