......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Monday, October 24, 2011

Aththipazham


பெரியோரே , நாம் வெளியே
காட்சி தரும் விரோதிகளை 
அடித்து வீழ்த்திவிட்டோம் -
ஆனால் அதைவிட உயர்தர 
விரோதி அகத்திலே அமர்ந்து 
இருப்பதைக் கவனிக்கவில்லை

இந்த  விரோதிகளை 
வீழ்த்துவது நம் அறிவைப்
பொறுத்த விஷயமல்ல -
அகத்திலுள்ள புலி 
முயல்களிடம் ஏமாறுவதில்லை 

மனமெனும் கழுதையை 
சுதந்திரமாக விட்டுவிடாதே
அந்தக்கழுதைக்கு  விருப்பமானது 
உலக  புல்வெளி .

அதை மறந்தும் சிறிது நேரத்திற்கு 
சுதந்திரமாக அலையவிட்டால் 
புல்வெளியை நாடி அது 
பல கல் தூரம் ஓடிவிடும் 

உனக்கு நேர்வழி 
தெரியவில்லையா ?
அந்தக்கழுதை சொல்வதற்கு
மிகவும் முரண்பட்டு நட 
அதுவே நேர்வழியாகும்

சத்தியத்தை செவிமடுத்தல் 
எல்லோருக்கும் சாத்தியப்படாது 
அத்திப்பழம் 
எல்லாப் பறவைகளுக்கும் 
உணவல்ல
Source: Malarvanam:  Moulana Rumi

No comments:

Post a Comment